Thursday, January 29, 2009

1971ஆம் ஆண்டு மற்றும் 1987-1989 காலப்பகுதிகளில் நடத்திய கிளர்ச்சிகளின் போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அரசினால் கொல்லப்பட்டார்கள். ஜே.வி.பி. ஒரு ஆயுதப் புரட்சிகர கட்சியாகவே நீடிக்குமென நம்பப்பட்டபோதும். இன்றைய அதன் நிலை ஒட்டுமொத்தமாக பாராளுமன்றவாதத்துக்குள் சரணாகதியடைந்து புரட்சிகர கொள்கைககளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலைமைதாங்கும் சக்தியாக எப்படி ஆனது? "முதலாளித்துவ அரசு ஒடுக்கும் கருவி" என்கிற மார்க்சிய விளக்கத்தையும் மீறி அந்த அரசுக்கே நிழல் தலைமைவகிக்கும் நிலைமைக்கு மாறிய கதை என்ன? சந்தர்ப்பவாத அரசியலுக்கும், பேரினவாதத்துக்கும் பலியாகி ஒரு அதிகாரத்துவ அடக்குமுறை கட்சியாக பரிமாற்றமடைந்தது எவ்வாறு என்பதை அவ்வப்போது ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. குறிப்பாக சரிநிகரிலும் ஏனைய சஞ்சிகைகளிலும் பிரசுரிக்கட்டவை இவை.

No comments: